உறங்கும் பிள்ளையின் உறக்கம் கலைக்க
தன் மனம் ஒவ்வாது
தட்டில் கிடந்த சோற்றை பிசைந்து
உருண்டை பிடித்து அவன் வாயில் ஊட்டி
இதழில் ஒட்டிய பருக்கை துடைத்து
அருகில் கிடந்து, அவனை அன்பாய் பார்த்து
கட்டி அனைத்து கம்பளி போர்த்தி
ஒரு குவளை நீர் அருந்தி உறங்கினாள் தாய்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment